Monday, February 15, 2010

வளையபட்டி தவிலே - அழகிய தமிழ் மகன்

பெண்: நீ நாதஸ்வரம் போல வந்தா.... ஆ.....
நீ நாதஸ்வரம் போல வந்தா நாவி கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டா ஸ்வரம் நானா
எட்டா ஸ்வரம் நானா

(இசை...)

ஆண்: வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே

குழு: மயக்குறியே
ஆண்: மயக்குறியே
குழு: மயக்குறியே

ஆண்: வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு: மயக்குறியே (நீ நாதஸ்வரம்...)

(இசை...)

ஆண்: உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிரிப்போ சிந்து பைரவி...
உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
நீ பார்க்கும் போது பாக்ய ஸ்ரீ
நீ கொஞ்சும் போது நீலாம்பரி

பெண்: நான் திருவைய்யாறு கச்சேரி...
குழு: பாக்யஸ்ரீ

பெண்: நான் திருவையாறு கச்சேரி
நீ தாளம் போட வேப்பேரி
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி

குழு: வளையபதி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே

(இசை...)

பெண்: நீ பாக்கும் போத...
நீ பாக்கும் போதே பத்திக்குதே
சொந்த ஊரு சிவகாசியா
பேசும் போதே ஜில்லிங்குதே
உங்க ஊரு சிரபுஞ்சியா

ஆண்: நீ நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முறுக்கேறுதே
மணப்பாறையா

குழு: நீ கை கால் முளச்ச மத்தளமா
உன்ன வாசிக்க பின்னால் சுத்தணுமா
நீ ஹார்மோனிய கட்டையம்மா
என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா...

பெண்: நான் வாலிபம் திருடும் வீணையடா
இங்கே வந்தால் ஒளியும் பூனையடா
நான் வயதுக்கு வந்த வயலினா
என்னை மைனர் போல வாசியடா (வளையபட்டி...)

குழு: மயக்குறியே மயக்குறியே மயக்குறியே

No comments:

Post a Comment